என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிராம நிர்வாக அலுவலர்"
- பண்ருட்டி அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- ஆத்திரம் அடைந்த கிராம மக்கள்,கிராமநிர்வாகஅலுவலர்அலுவலகம்முன்பு திரண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வேகாக் கொல்லை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது இந்த கிராம நிர்வாக அலுவலர்அலுவலகத்தை அதே பகுதியில் உள்ள அழகப்ப சமுத்திரம் ஊராட்சிசிறுதொண்டமாதேவிகிராமத்திற்கு மாற்றப்பட உள்ளதாகதகவல் பரவியது. ஆத்திரம் அடைந்த கிராம மக்கள்,கிராமநிர்வாகஅலுவலர்அலுவலகம்முன்பு திரண்டனர். பின்னர்கொள்ளு காரன் குட்டை- குள்ளஞ்சாவடி சாலையில்காட்டு வேகாகொல்லையில்சாலைமறியல்ஈடுபட்டனர்.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார்சிவாகார்த்தி கேயன்,பண்ருட்டிபோலீஸ்இன்ஸ்பெக்டர்சந்திரன் மற்றும்காடாம்புலியூர்போலீசார்சம்பவஇடத்துக்குவிரைந்து சென்றனர்.பொதுமக்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை மாற்று வதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வில்லை வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனபொதுமக்களிடம் தாசில்தார் விலக்கிகூறினார். இதனை தொடர்ந்து பொதுமக்கள்போராட்டத்தைவிலக்கிக்கொண்டனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
- மாநில தலைவர் ராஜேந்திரன் அரசுக்கு கோரிக்கை
நாகர்கோவில்:
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடந்தது. மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
குமரி மாவட்ட தலைவர் செந்தில்குமார், துணை தலைவர் ராஜேஷ், துணை செயலாளர் மோகன், இணை செயலாளர் மது மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் நாகேஸ்வர காந்த் வரவேற்று பேசினார்.
மாநில பொதுச் செயலா ளர் சுரேஷ் விளக்கவுரை ஆற்றினார். பொருளாளர் முத்துச்செல்வன், செய லாளர் விஸ்வநாதன், துணை தேர்தல் ஆணையர் விஜய பாஸ்கர், சங்க ஆலோ சனை குழு உறுப்பினர் குமார், ஜீவரத்தினம் சசி குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
முன்னதாக மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் காலியாக உள்ள 800- க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கான கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்